ETV Bharat / state

போலீஸ் கண்ணில் மிளகாய் பொடி தூவிய கைதி!

author img

By

Published : Jul 10, 2021, 11:57 AM IST

காவல்துறையினர் கண்ணில் மிளகாய் பொடி தூவிவிட்டு தப்பி ஓட முயன்ற கைதியை காவலர்கள் மடக்கி பிடித்தனர்.

மிளகாய் பொடி தூவிய கைதி
மிளகாய் பொடி தூவிய கைதி

திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி மரிய சிலுவை (45) என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறைக் காவலர்கள் அனுமதித்தனர்.

இந்தச் சூழ்நிலையில் இன்று (ஜூலை 10) காலை மரிய சிலுவை மருத்துவமனை கழிவறைக்கு சென்றபோது அங்கே வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து காவலர்கள் கண்ணில் தூவி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.

சுதாரித்துக் கொண்ட பிற காவலர்கள் ஓடி சென்று மரிய சிலுவையை மடக்கி பிடித்தனர். இவர் கைதி மரியசெல்வம் அடிதடி வழக்கில் பெருமாள்புரம் காவலர்களால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பி.ஹெச்டி மாணவியிடம் லஞ்சம்- பேராசிரியைக்கு 3 ஆண்டு சிறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.